Thursday, May 5, 2016

2008 (I - 10)

பார்க்க பார்க்க ஆசை வருது
அடக்க முடியல!
நேரில் பார்த்தால் என்னவாகுமோ
எனக்கு தெரியல.

பிறந்த நாள் இன்றுனது
வாழ்த்த நானில்ல.
வாழ்த்துவது யாரெனினும்
நானன்றி வேறல்ல.
படையல் உணவை புசித்ததில்லையே
இந்நாள் வரையில் எந்த கடவுளும்
பசியால் வாடும் பிள்ளைகள் இருக்க
தாயாம் கடவுள் புசித்ததில்லையே.

பசியின் கொடுமை உணர்ந்தவர் இயேசு
பசிவர பத்தும் பறந்துபோம் எனவே
பழமிலாக்காலம் என்றபோதும் சபித்தார்
அந்த அத்தி மரத்தையே.

இவரே தமது உடலைக்கூட
உணவென தரவும் தயங்கவில்லையே
உயிர்வாழ உணவு தேவை - ஆனால்
இயேசுவின் ஊனுடல் நிலை வாழ்வு தருமே.

பரத்திலிருக்கும் பரமபிதாவிடம்
அனுதின உணவை அளித்திட கேட்டார்
அனுதின உணவில் அடிப்படை தேவை
அனைத்தும் அடங்கும் என்றறிவோம்.

வான்வெளி பறவைக்கு உணவளித்து
வயல்வெளிப்பூக்களை ஆடை உடுத்தி
அழகு பார்க்கும் அன்பு கடவுள்
அவர்தம் மக்களை மறப்பதெங்ஙனம்?

எனவே அவர் மானுடம் பெற்றார்
மானுடனான இறைமகன் இயேசு
தம் ஊனுடல் தந்து நமக்கு
நிலை வாழ்வு அளித்து சென்றார்.
௧௮.0௩.0௮.
Thursday 24 April 2008

இரவு பதினொன்று மணிக்குமேல்...
பழக்கமில்லாத குரல் மறுமுனையில்...
அதுவும் பெண்குரல்...!

பதட்டம் தீர்க்க 'பபிதா' என்றது
வியப்பைச்சேர்க்க 'திருமணம்' என்றது.

நிமிட நேரத்தில் நிலைவலைகள்
தூதூருக்கு தூக்கிச்செல்ல
பபிதா, லூசியா மற்றும் சின்னம்சிறுமலர்கள்
சிரித்து விளையாடி 'இறையரசு 'தங்களதெ'
சாற்றுவதை வியந்து நிற்க...

'
புதுநன்மைக்கு வரவில்லை, பரவாயில்லை,
புதுவாழ்க்கை, மணவாழ்க்கை தொடங்கிவைக்க
வாருங்கள், வாழ்த்துங்கள்' என்றாயே.

நினைத்தாலும் நிறைவேற்ற முடியாத
நிலையில் நானம்மா, புரிந்துகொள்க
நிச்சயம் நானிருப்பேன் உங்களுடன்
உள்ளத்தால் உயரிய செபத்தால்.

சிவமின்றி சக்தியும், சக்தியின்றி சிவவுமில்லைஎன
சிவசக்திசெரூபன், அர்த்தநாரீஸ்வரன், அம்மையப்பனாக
உமையை சரிபாதியாக்கிய உமாபதிபோல்
பபிதாபதி ஜூலியஸ் உன் துணையாக.
2006 
Wednesday 23 April 2008

கமிதா, காண்க உன் பிறந்த நாளை
கண் திறந்து பார்க்க இப்பொன்னாளை
காண்பவர் போற்றுக இந்நான்னாளை
காணத்துடிக்கிறேன் இந்நாளை.

கலையாக வாழ்க நீ எந்நாளும்
கடமை தவறாதே ஒருநாளும்
கவலை உனக்கில்லை ஒருபோதும்.

போர்க்குணம் உனக்கிருக்கு
பொறுமையுடன் போராடு
பொலிவான வெற்றி நேடு.

பொருள் நடுவில் பிறந்தாய்
பொருள் இழக்க வளர்ந்தாய்
பொருள் சேர்க்க வளர்வாய்.

பொருள் சோர்ந்து பொலிவிழந்த
பொறுமை இல்லா பெற்றோர்க்கு
பொறுப்புடன் வாழ துணை நில்.

'
யானைக்கு பலம் தும்பிக்கையில்'
நமக்கு பலம் நம்பிக்கையில்
தன்னம்பிக்கை வளர்த்து
வாழ்வில் வெற்றி கானன்.

வாழ்க வளமுடன்
வளர்க்க வலுவுடன்
'
வானுறையும் தெய்வம் போலாக.
2008

புவிதா, பிறந்த நாள் இன்றுனது
புவியில் நீ தோன்றியது நன்றானது
புரியுதா பெயர் பொருள் என்னவென்று
புரிந்துவாழ முயல்க என்றும்.

பெயர் பொருள் புரிதல் நன்று
அதனினும் நன்று வாழ்க்கைப்
பொருள்புரிதல் என்றும்.

வாழ்க்கை பொருள் புரிய
தேடல் வேண்டும்
தேடுவதும் வாழ்வில் வேண்டும்.

வாழ்வென்பது நம் வாழ்வு மட்டுமல்ல
'
வாழ்ந்த' பலர் வாழ்க்கையிலும் அதுவுண்டு
தேடு அதை, பின் நாடு அதை நன்று.

கல்வி என்பதும் ஒரு தேடலே
எனவே 'கற்க கசடற'
'
கற்றபின் நிற்க அதற்கு தக.'

வாழ்த்த மறக்கவில்லை
வாழ்த்துவதே வாழத்தானே
வாழும் வழி சொல்வதும்
வாழ்த்துத்தானே?

எனினும் வாழ்த்துகிறேன்
வாழ்வாங்கு வாழ்ந்து
வானளாவ வளர்க்க.
[
வானுறையும் தெய்வம் போலாக
2008

அமுதா கண்ணே
ஆசை மகளே
இன்றுனது பிறந்தநாள்
ஈங்கிதோ மாமன்
உளமார வாழ்த்துகிறேன்
ஊர்புகழ வாழ்க
என்றும் சிறக்க
ஏற்றம் பெறுக
ஐயம் தவிர்க்க
ஒற்றுமை போற்றுக
ஓங்கி வளர்க
ஔவை போலாக.


கண்ணே அமுதா கலங்காதே
கடவுள் காப்பார் தயங்காதே
காலம் வரும் காத்திரு
கடமை செய்து விழித்திரு.

பெண்மை உணர்ந்தாய் -அதன்
உண்மை அறிந்தாய்
உறவை தேர்ந்தாய்-அந்த
உலகை ஆலவாய்

பசி தெரியாத பிள்ளை நீ
பாசம் பருகிய பாவை நீ
மனமேலாம் வெள்ளை நீ
மாசில்லா மங்கை நீ.

கருணை உனது கவசமாக
கனிவு உந்தன் வார்த்தையாக
தெளிவு நின் சின்தையாக
உறுதி நின் செயலிலாக.
2008

Friday, 25 April 2008
7.       ஆறடி மண்... [2007]
ஆறடி மண் வேண்டும் மாந்தருக்கு
மூன்றடி போதுமென்றான் வாமனன்
முக்கால் கூட இருக்காதே நமக்கு
முழுதும் விழுங்கும் கடல் இருக்க!
2007

Saturday 29 March 2008
8.       The Love…[2008]


Jesus loved Martha,
Her sister and Lazarus.
This sister is none other than
The lovely damsel Mary!

When Lazarus, their brother
Left them for ever
They wanted their love
To share their grief.

And so send word:
“Lord, he whom you love
Is dead….”

Even in her grief
She rose quickly
To meet the Him
On the way.

Seeing her weeping
He also wept…

Now, when Jesus died
The grief was manifold.
She stood by the cross
Came first to the tomb
Stood their weeping…

Love can never be kept
Buried in any tomb
So rose to comfort the loved
Asking: “why are you weeping?”

Love knows no bound
And called “Mary!”
No sooner she realized
She turned to embrace!

“Cling not unto me,
Go instead to my brethren
Tell them that
Love has overcome death!

Easter 2008
Monday 24 March 2008
9.       A Different Psalm![2008]

O all you works of the Lord, O bless the Lord.
To him be highest glory and praise for ever.

And you the heavens and the earth, O bless the Lord.
And you light and darkness, O bless the Lord.
And you day and night, O bless the Lord.
To him be highest glory and praise for ever.

And you firmament in the midst, O bless the Lord
And you earth and sea, O bless the Lord
And you all the vegetation, O bless the Lord
To him be highest glory and praise for ever.

And you sun and moon, O bless the Lord
And you stars of the sky, O bless the Lord
And you fishes, birds and animals, O bless the Lord
To him be highest glory and praise for ever.


And you man and woman, O bless the Lord
And you Cain and Abel, O bless the Lord
And you nameless daughters, O bless the Lord
To him be highest glory and praise for ever
Posted by Erayumman Pankyat 6:14 AM
Wednesday 19 March 2008
10.    Nilai vaazhvin Unavu...[2008] நிலை வாழ்வின் உணவு

"Padayal unavai pusitthathillaye படையல் உணவை புசித்ததில்லையே
innaal varayil entha kadavulum
இந்நாள் வரையிலும் எந்தக் கடவுளும்
pasiyaal vaadum pillaikalirukka
பசியால் வாடும் பில்லைகளிருக்க
thaayaam kadavul pusitthidalaamo?
தாயாம் கடவுள் புசித்திடலாமோ?

Pasiyin kodumaiyai unarnthavar Iesu
பசியின் கொடுமையை உணர்ந்தவர் இயேசு
pasivara patthum paranthupom enave
‘பசி வர பத்தும் பறந்துபோம்’ எனவே
pazhamilaakkaalam eninum sabithaar
பழமிலாக் காலம் எனினும் சபித்தார்
antha atthi marathaiye!
அந்த அத்தி மரத்தையே!

Ivare thamathu udalaikkooda
இவரே தமது உடலைக் கூட
unavenattharavum thayankavillaye
உணவேனத் தரவும் தயங்கவில்லை
uyirvaazha unavu thevai aanaal
உயிர்வாழ உணவு தேவை, ஆனால்
Iesuvin oonudal nilaivaazhvu tharume.
இயேசுவின் ஊனுடல் நிலைவாழ்வு தருமே.

Paratthilirukkum paramapithaavidam
பரத்திலிருக்கும் பரம பிதாவிடம்
anuthina unavai alitthidakkettaar
‘அனுதின உணவை அளித்திட’ கேட்டார்
anuthina unavil adippadaithevai
அனுதின உணவில் அடிப்படைத் தேவை
anaitthum adankum entrarivome.
அனைத்தும் அடங்கும் என்றரிவோமே

Vaanvelipparavaikku unavu thanthu
வான்வெளிப் பரவைக்கு உணவு தந்து
vayalvelippookkalai aadai udutthi
வயல்வேளிப் பூக்களை ஆடை அணிவித்து
azhakupaarkkum anbukkadavul
அழகுபார்க்கும் அன்புக் கடவுள்
avartham makkalai marappathenganam?
அவர்தம் மக்களை மரப்பது எங்கனம்?

maravaathirukka maanudam petraar
மறவாதிருக்க மானுடம் ஏற்றார்
maanudanaana iraimahan Iesu
மானுடனான இறைமகன் இயேசு
makkal namakku oonudal thanthu 
மக்கள் நமக்கு ஊன்-உடல் தந்து
maaraavaazhvu makkalukkalitthaar."
மாராவாழ்வு மக்களுக்களித்தார். 

No comments:

Post a Comment