Wednesday, May 4, 2016

1977 (3)

அம்மா பாவத்தால் என் ஆன்மா
அழிந்துவிடுமென்றஞ்சுகிறேன்
தாபம் நிறைந்தே நான் உன்னை
அண்டி வருகிறேன் ஆதரி நீ.

நேசத்தாயே இறைமகனை
எமக்கு ஈன்று தந்தாயே
வேந்தனை ஈன்று தந்ததனால்
மாந்தரின் மாதா ஆனாயே.

மதுரமும் சாந்தமும் நிறைந்தவளே
மானிடர் எம்மை ஏற்றருளே
கிருபை தயாபம் உடையவளே
கிறிஸ்துவோடெம்மை சேர்த்தருளே.
1977
எழுந்தருளே என்னகத்தே-எந்தன்
எழ்மையினை போக்கிடவே
வந்தருள வையகத்தே -அதன்
வருமைகளை விரட்டிடவே.

பாவத்தை பலமாக பகைத்திருந்தும்
பாவிகளை பரிவுடனே பார்ப்பவனே
மனம் நொந்து மன்னிப்பு பெற்றுவிட்டால்
மறுக்காமல் வருவாயா என்னகத்தில்?

வரவேண்டும் என்னகத்தே
தரவேண்டும் அருட்கொடைகளை
வரவேண்டும் அவனிதனில்
தரவேண்டும் அமைதிதனை.
1977 
உண்மையில்லா உள்ளங்கள்
உலவிவரும் உலகினிலே
எண்ணமில்லா ஏழைகளை
ஏமாற்றும் எத்தர்களை
என்ன செய்வோம்?
ஏது செய்வோம்?

கள்ளமில்லா காளையர்கள்
கயவர்களை களைந்திடவே
முழுநேர முயர்ச்சியாலே
முறியடிக்க முன்வருவோம்.

நீதிதனை நேர்மைதனை
நிலைநாட்ட நினைத்திடுவோம்
உழைப்பாலே உயர்வடைவோம்
உலகினையே உயர்த்திடுவோம்.
1977

No comments:

Post a Comment