தமிழுக்கே தலைமையிடம் -என்
தங்கைக்கோ தனி ஓரிடம்
தமிழுக்கு தரமறுத்த தனியிடத்தை
தங்கைக்கு தந்துவிட்டேன் நன்று.
தமிழ் பிறந்து தரணிஎலாம் தழைத்திருக்க
தங்கைமட்டும் ஏனின்னும் தழைக்கவில்லை?
அவள்தழைக்க தலைமையிடம்தான் வேண்டின்
அளித்திடுவேன் அந்தயிடம் தங்கைக்கின்று.
உனக்கென்று வாழ்த்தெழுத நினைக்கும்போது
.....
தங்கைக்கோ தனி ஓரிடம்
தமிழுக்கு தரமறுத்த தனியிடத்தை
தங்கைக்கு தந்துவிட்டேன் நன்று.
தமிழ் பிறந்து தரணிஎலாம் தழைத்திருக்க
தங்கைமட்டும் ஏனின்னும் தழைக்கவில்லை?
அவள்தழைக்க தலைமையிடம்தான் வேண்டின்
அளித்திடுவேன் அந்தயிடம் தங்கைக்கின்று.
உனக்கென்று வாழ்த்தெழுத நினைக்கும்போது
.....
என்னுடன்
பழகும் எவரையுமே நான்
எந்த முறையிலும் கேடுத்திடமாட்டேன்
ஏராளமாக நன்மைகள் செய்து
ஏனையோர் வாழ்ந்திட வழிசெய்வேன்.
ஏழைகள் எளியவர் என்பவர் இங்கே
ஏங்கிடும் காட்சி வாட்டுது நெஞ்சை
ஏன் எனக்கேட்க்க ஏழைக்கு எங்கே
ஏட்டுப்படிப்பும் எழுத்தறிவும்?
எழுதத்தெரிந்தால் என்னென்பான்
எண்ணத்தேரிந்தால் எதுவென்பான்
எதுவும் வேண்டாம் இவர்களுக்கே
என்பதுதானே அடக்குமுறை.
1979
எந்த முறையிலும் கேடுத்திடமாட்டேன்
ஏராளமாக நன்மைகள் செய்து
ஏனையோர் வாழ்ந்திட வழிசெய்வேன்.
ஏழைகள் எளியவர் என்பவர் இங்கே
ஏங்கிடும் காட்சி வாட்டுது நெஞ்சை
ஏன் எனக்கேட்க்க ஏழைக்கு எங்கே
ஏட்டுப்படிப்பும் எழுத்தறிவும்?
எழுதத்தெரிந்தால் என்னென்பான்
எண்ணத்தேரிந்தால் எதுவென்பான்
எதுவும் வேண்டாம் இவர்களுக்கே
என்பதுதானே அடக்குமுறை.
1979
பாய்விரித்து
படகோட்டி
வலைபோட்டு மீன்பிடித்து
வருமவரை எதிர்நோக்கி
ஏங்கிநிர்க்கும் தாய்க்குலங்கள்.
களைப்புற்று கடல்கடந்து
கரைவந்து சேர்ந்தோர்க்கு
உணவளித்து உபசரித்து
உறங்கவைக்கும் உத்தமிகள்.
கொண்டுவந்த மீன்களையே
கொணர்ந்திடுவாள் சந்தைக்கு
தலைச்சுமையாய் தலைதெறிக்க
ஓடிடுவாள் வழியெல்லாம்.
1979
வலைபோட்டு மீன்பிடித்து
வருமவரை எதிர்நோக்கி
ஏங்கிநிர்க்கும் தாய்க்குலங்கள்.
களைப்புற்று கடல்கடந்து
கரைவந்து சேர்ந்தோர்க்கு
உணவளித்து உபசரித்து
உறங்கவைக்கும் உத்தமிகள்.
கொண்டுவந்த மீன்களையே
கொணர்ந்திடுவாள் சந்தைக்கு
தலைச்சுமையாய் தலைதெறிக்க
ஓடிடுவாள் வழியெல்லாம்.
1979
இனியவளே
இரயுமன்துறைத்தாயே
இயற்கையின் இளமை நிறைந்தவளே
இருப்போர்க்கின்பம் அளிப்பவளே
இறந்தோர் உன்னை இழந்தனரே!
தாமிரபரணி உந்தன் தாழ் தழுவ
அரபிக்கடல் உந்தன் தலை வருட
கடற்காற்று உனைஎன்றும் அரவணைக்க
கண்ணை பறிப்பது உன்னழகே!
இளம்காளையர் இளம் மீனவர்
கயல்விழி மாதர் கவின்மிகு மங்கையர்
கதிரவன் ஒளியினில் கடற்க்கரைகாதளர்
கலந்துறவாடுவர் களிப்புருவர்.
1979
இயற்கையின் இளமை நிறைந்தவளே
இருப்போர்க்கின்பம் அளிப்பவளே
இறந்தோர் உன்னை இழந்தனரே!
தாமிரபரணி உந்தன் தாழ் தழுவ
அரபிக்கடல் உந்தன் தலை வருட
கடற்காற்று உனைஎன்றும் அரவணைக்க
கண்ணை பறிப்பது உன்னழகே!
இளம்காளையர் இளம் மீனவர்
கயல்விழி மாதர் கவின்மிகு மங்கையர்
கதிரவன் ஒளியினில் கடற்க்கரைகாதளர்
கலந்துறவாடுவர் களிப்புருவர்.
1979
மலர்வேன் ஒரு குருவாக
மகிழ்வேன் அருட்பெருக்காலே
உடலேடுப்பேன் பலிபொருளாக
அளிப்பேன் அதையே பலியாக.
கிறிஸ்துவின் சீடனும் குருவேதான்
மறுகிறிஸ்து என்பதும் அவரேதான்
அப்ப-ரசமதை மாட்றிடுவார்-அதை
கிறிஸ்துவின் ஊனுடல் ஆக்கிடுவார்.
பாவிக்கு பொறுத்தல் அளித்திடுவார்
நோயாளிக்கும் ஆறுதல் அருளிடுவார்
மறையுரை ஆற்றி மக்களையே
மன்னவனண்டையில் அழைத்திடுவார்.
வேறு:
இறைபணி செய்து இன்னலகற்றி
இகமதில் வாழ்ந்து இறைவனைசேர
இறைமகன் இயேசு அழைக்கும்போது
இறங்கிடுவேன் அவர் பின்னாலே.
1979
மகிழ்வேன் அருட்பெருக்காலே
உடலேடுப்பேன் பலிபொருளாக
அளிப்பேன் அதையே பலியாக.
கிறிஸ்துவின் சீடனும் குருவேதான்
மறுகிறிஸ்து என்பதும் அவரேதான்
அப்ப-ரசமதை மாட்றிடுவார்-அதை
கிறிஸ்துவின் ஊனுடல் ஆக்கிடுவார்.
பாவிக்கு பொறுத்தல் அளித்திடுவார்
நோயாளிக்கும் ஆறுதல் அருளிடுவார்
மறையுரை ஆற்றி மக்களையே
மன்னவனண்டையில் அழைத்திடுவார்.
வேறு:
இறைபணி செய்து இன்னலகற்றி
இகமதில் வாழ்ந்து இறைவனைசேர
இறைமகன் இயேசு அழைக்கும்போது
இறங்கிடுவேன் அவர் பின்னாலே.
1979
No comments:
Post a Comment