Wednesday, May 4, 2016

1992 (2)

பட்டங்கள் பெற்றதொன்றும் பலனளிக்கவில்லை
பலவருடம் காத்திருந்தும் பதவியொன்றுமில்லை
பார்ப்பவர்க்கு பரிதாபம், பழகுவோர்க்கு பரிகாசம்
பாதகந்தான் ஏது செய்தோம், பதிலளிப்பீர் பாவலரே!

வேலைவேண்டி வெளியுலகம் சென்றுவந்தோம்
வேண்டாத விபரீதம் பெற்றுவந்தோம்
விரக்தியுடன் வீணர்களாய் வீடுவந்தோம்
வித்யாசமான வழியொன்று முயன்றுவந்தோம்.

முயர்ச்சி திருவினையாக கண்டோம்
முறையது சுயவேலையென உணர்ந்தோம்
முறையற்ற வழியெதுவும் வேண்டாமென்றோம்
முத்தான கருத்தாக 'மக்கள் பேரங்காடி' கண்டோம்.

தொண்டுசெய்யும் பண்பெல்லாம் மறைந்துவர
தொழிலுக்காக தொண்டினையே பலர் கண்டுவர
தொண்டினையே தொழிலாக்கும் மக்கள் பலர்
தொடங்கும் இம்முயர்ச்சியினை வாழ்த்திடுவீர்.
௨௬.௧0.௧௯௯௧

அந்திப் பொழுது ஆனபின் அன்று
அலைகடல் மேலே 'அருணா'வினின்று
ஆங்கே தொலைவிலுள்ளது 'கொர்லை'என்று
ஆதவன் மறைய படகினில் சென்றோம்.

படகினில் நண்பர் நால்வருடனே
பாதைகளில்லா கடல் பரப்பினிலே
பயணமானோம் பதட்டத்துடனே
பாட்டும் வந்தது பாவையுன்னாலே.

பகலவன் பயணம் முடிக்கும் வேளை
பறவையினங்கள் பார்ப்பிடம் தேடி
பறந்து வருவதும் பார்த்து நின்றோமே
பாவை நீயிதை பார்த்திடுவாயோ?

புள்ளினம் ஒன்று புதுப்பாடல் பாடி
பூவையுந்தன் தூதினை கொணர்ந்தது
புள்ளினம் தந்த தூதினை ஏற்று
புதுக் கவிதை ஒன்று புனைந்தேன் உனக்கு.

என் கவிதை கொணர ஆளிலைஎன்று
ஏங்கி நான் நின்று தவித்திடும் வேளை
எங்கிருந்தோ ஒரு தென்றல் வந்து
என் கவிதை தனையே எடுத்து சென்றது.

கடல்வழி அந்த காற்றும் சென்றது
கவிதை தவறி கடலில் விழுந்தது
கவிதை கடலில் கரைந்து ஒன்றானது
கண்மணி நீயிதை அறிவாயோ?

அதேக்கடல் அரபிக்கடல்தான்
அங்கே நமது ஊரிலும் உள்ளது
அலையுடன் அந்த கவிதையும் வந்தது
அன்பே நீயதை பெற்றுக்கொண்டாய?

No comments:

Post a Comment